
உலகிலேயே என் காதல் மட்டும் தான் புனிதம் என்று நினைத்தேன்.
உன் அன்பிற்காக, அரவணைப்பிற்காக ஏங்கி பிச்சை கேட்டு அலைந்தேன்.
என்றோ ஒரு நாள் என் காதல் நிறைவேறும் என்று காத்திருந்தேன்.
ஆனால், என் இதயம் பிளக்கும் ஒரு உண்மையை இன்று புரிந்து கொண்டேன்!
என்னை விட குணத்தில் சிறந்த காதல் நெஞ்சங்கள் எத்தனையோ....
அவர்கள் அடையாத காதல் வரத்தை, பாவியான நான் எதிர்ப்பார்த்து காத்திருப்பது ஏனோ.....
என் தகுதி அறிந்தும் என் உள்ளம் அலை பாய்வதும் ஏனோ.....
அன்பே, சொல்லடி! நீ ஏன் என் வாழ்வில் வந்தாயடி?
˙·٠•●♥ K.$ ♥●•٠·

No comments:
Post a Comment