கண்ணீரையும் மிச்சம்வைத்தேன்.நீ அடுத்த ஜென்மத்தில்என்னை ஏமாற்றினால்மீண்டும் சிந்தி விட..Kabilan...$
Sunday, June 26, 2011
பார்த்து கொண்டிருக்கும் நிமிடங்களை விட நினைத்து கொண்டிருக்கும் நிமிடங்களில் தான் அன்பு அதிகமாக இருக்கும்...! ˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
என் கைகளில் முட்கள் குத்திய போது கூட எனக்கு வலிக்கவில்லை... ஆனால், அவள் என் கைகளை உதறி விட்டு சென்ற போது வலித்தது ...! கைகள் அல்ல, என் இதயம்...! ˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
அவள் முகம் பார்த்து விட்டால் என் விழிகளுக்கு இமைக்க கூட மனம் வர வில்லை... ˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
அழுகை பிடிக்கும் எனக்கு வேதனைகள் நீ தந்ததென்றால் வலிகள் பிடிக்கும் எனக்கு காயங்கள் உன்னால் ஆனதென்றால் தோற்க பிடிக்கும் எனக்கு வெற்றிகள் உன்னை சேரும் என்றால் எதையும் இழக்க பிடிக்கும் எனக்கு நான் உன்னோடு வாழ்வதென்றால் இதென்ன ....... மரணம் கூட பிடிக்கும் எனக்கு உனக்காக என் உயிர் தருவதென்றால்... ˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
இனியவளே ! சிரித்துக் கொண்டே என்னை அழ வைக்கிறாயே...! ஏன் காதலித்து கொண்டே என்னை வாழ வைக்கலாமே...!!! ˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
முத்தம் நான் இஷ்டபட்டு கேட்டேன் நீ கஷ்ட்ட பட்டு கொடுத்தாய் இப்போது நீ இஷ்டபட்டு பிரிந்தாய் நான் கஷ்ட்டப்பட்டு துடிக்கிறேன்... ˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
உலகத்தில் மலரை நேசிப்பவர்கள் முள்ளை நேசிப்பது இல்லை... நான் முள்ளை நேசிக்கிறேன் ஒரு மலர் என்னைக் காயப்படுத்தியதால்... ˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
மரண வலி தெரியாது... புரிந்தது... மரண வலி இப்படிதான் இருக்கும் என்று... நீ எனை விட்டு பிரிந்து சென்ற நாட்கள்... ˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
படுகொலையை விட மோசமான சாவை தந்தாய் உன்னை நினைத்தே நான் சாவதற்கு காதல் எனும் ஆயுதத்தால்... ˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
என்னிடம் பேசிகொண்டே நீ உன் தோழியுடம் பேசுவதாய் பொய் சொன்ன போது ஏமாந்தது உன் பெற்றோர் மட்டுமில்லை நானும்தான் உன் காதலால்... ˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
என்னவளே அழகாய் காதலிக்கலாம் அழகியை காதலிக்கலாம் போலி அழகாய் இருக்கும் உன் அன்பை எப்படி காதலிக்க...!!! ˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
சிரித்து கொண்டு இருக்கின்றேன் கண்களில் கண்ணீருடன் !!! நீ என்னை விட்டு சென்ற கணம் முதல் நிற்க துடிக்கும் என் இதயத்தை கண்டு !!! ˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
நான் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் ஓராயிரம் அர்த்தங்கள் உண்டு... !!! அதில் ஒன்றாவது உனக்கு புரிந்திருந்தால் என் மனம் மகிழ்ந்திருக்கும் அதை கண்டு ..!!! ˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
உன் காதலை தொலைத்தேன் காதலை உணராமல் இன்று உணர்ந்து அழுகிறேன் அந்த காதல் மீண்டும் கிடைக்காதா என்று...? ˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
என்னிடம் பேசாதே என்று சொல்லி இதுவரையில் 2 நாட்கள் முடிந்து விட்டன. ஆனால், எனக்கோ இரண்டு யுகங்கள் கடந்து விட்டது.. மறுபடியும் உன்னிடம் பேசி என்னை நானே ஏமாற்றி கொள்வதற்கு பதிலாக நான் அழுது கொண்டே எத்தனை யுகங்களையும் கடந்தாலும் எனக்கு வலியில்லை.வலியுடன் உன் காதலன் கபிலன்... ˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
உன்னை சேரத்தான் துடிக்குது என் மனசு... ஆனால், நீ என்னை ஏமாற்றிய மனதோடு சேர எனக்கு விருப்பமில்லை.. இன்னொரு மனசு இருக்குமென்றால் அப்போது வருகிறேன் உன்னோடு வாழ... ˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
உன் விழிகளுக்கு கண்ணீர் துளிகள் வேண்டுமாயின் என் கதையை எடுத்துப்படி அது சொல்லித்தரும் உனக்கு... ˙·٠•●♥ K.$ ♥●•٠·
என்னை ஏனோ இப்பொழுது நீ காதலிக்க மறுக்கிறாய்... என்றாவது ஒருநாள் நீ என்னை நினைக்ககூடும்...!!! அப்பொழுது சொல்வாய்,, உன்னை நினைக்க மறுத்த என் மனம் இப்போது உன்னை விட்டு பிரிய மறுக்கிறது என் கல்லறையில் நின்று கொண்டு... ˙·٠•●♥ K.$ ♥●•٠·
கண்கள் அழவில்லை உதடுகள் சொல்லவில்லை இதயம் மட்டும் வலிக்கிறது உன்னை காணாமல்... ˙·٠•●♥ K.$ ♥●•٠·
விரும்பி விரும்பி காதலித்தேன் என்னவளை விரும்பி விரும்பி போனால் இருபத்தையாயிரம் சம்பளம் இருப்பவனை என் இதயம் வலிக்கிறது பணத்திற்காக காதலா என்று... இப்போது ரத்தம் சொட்டுகிறது என் இதயத்தில்... ˙·٠•●♥ K.$ ♥●•٠·
உனக்கு நான் மௌனமாக இருப்பது போலதான் தெரிகிறது...
நம் காதலுக்கு தெரியும் ...
நான் உள்ளே கதறிக்கொண்டு இருப்பது... ˙·٠•●♥ K.$ ♥●•٠·
ஒவ்வொரு முறையும் என்னை பிடிக்கும் என்று சொன்னாய்...
இப்போதுதான் தெரிகிறது
பிடிக்கும் என்றால் பிடிக்க வில்லை என்று அர்த்தம் என்று... ˙·٠•●♥ K.$ ♥●•٠·
நான் காதல் சொன்ன போது நீ ஏற்று கொள்ளவில்லை நீ காதல் சொன்ன போது நான் காதல் சொல்வில்லை இதனால் நம் காதல் வளரவில்லை... ˙·٠•●♥ K.$ ♥●•٠·
என் காதலை மறக்க முயற்சி செய்யக்கூட என்னால் முடியவில்லை... என் காதலியை மறக்க முயற்சி செய்கிறேன் முடியாத காரியம் என்றாலும் முடியும் என்னால்... என்றும் பிரிவுடன் கபிலன்... ˙·٠•●♥ K.$ ♥●•٠·
மற்றவரையெல்லாம் வாழவைத்து வடிவு பார்க்கும் நான் உன்னை மட்டும் அழித்துவிட ஆசைப்படுவேனா??? நலமுடன் நல்லாயிரு... ˙·٠•●♥ K.$ ♥●•٠·
என் நினைவுகள் உனக்கு முட்களானால் அவற்றை வீசாதே! உன்னை எப்போதவது அவை குத்தக் கூடும்! ஆகவே குழிவெட்டி புதைத்து விடு... ˙·٠•●♥ K.$ ♥●•٠·
உலகிலேயே என் காதல் மட்டும் தான் புனிதம் என்று நினைத்தேன். உன் அன்பிற்காக, அரவணைப்பிற்காக ஏங்கி பிச்சை கேட்டு அலைந்தேன். என்றோ ஒரு நாள் என் காதல் நிறைவேறும் என்று காத்திருந்தேன். ஆனால், என் இதயம் பிளக்கும் ஒரு உண்மையை இன்று புரிந்து கொண்டேன்! என்னை விட குணத்தில் சிறந்த காதல் நெஞ்சங்கள் எத்தனையோ.... அவர்கள் அடையாத காதல் வரத்தை, பாவியான நான் எதிர்ப்பார்த்து காத்திருப்பது ஏனோ..... என் தகுதி அறிந்தும் என் உள்ளம் அலை பாய்வதும் ஏனோ..... அன்பே, சொல்லடி! நீ ஏன் என் வாழ்வில் வந்தாயடி? ˙·٠•●♥ K.$ ♥●•٠·
வார்த்தைகளால் உன்னை வாரிக் கொடுத்தாலும் உதட்டால் உன்னை உண்மையாக கொடுத்தாலும் மனதால் உன்னை மாற்றானிடம் விட்டு கொடுக்க முடியவில்லை... ˙·٠•●♥ K.$ ♥●•٠·
காதலின் வலி காதலனுக்கு புரியும் காதலனின் வலி காதலிக்கு புரியும் ஆனாலும்.... காய படுத்துவாள் அதில் ஒரு சுகம் அவளுக்கு... அதுவே சுகமானது எனக்கு... ˙·٠•●♥ K.$ ♥●•٠·
நான் மரணத்தையே காதலித்து இருக்கலாம்...
அது தான் வருவது தவிர்க்காது... ˙·٠•●♥ K.$ ♥●•٠·
நீயே வேறொருத்தவனை நினைத்தபின் நான் உன் நிழல்மேல் ஆசைபடுவது தவறன்றோ.. என்னையே நான் வெறுக்கத்தொடங்கினேன் எண்ணங்களை மறக்கத்தொடங்கினேன் என் ஆசைகள் அனைத்தும் நிராசைகள் ஆகின என் கனவுகள் என் கண்களை போல் கலங்கின உன்னை நினைத்த இந்த மனதில் உணர்வு என்னும் வார்த்தை மடிந்தது என் இதயம் புழுவாய்த்துடிக்கின்றது இதற்க்குமேல் தாங்க என்னால் முடியாது என்னை சீக்கிரம் எடுக்க சொல்லி எமனுக்கும் இறைவனுக்கும் மனு அனுப்பினேன் அதை ஏற்று வருவார்கள் என்று நானும் காத்திருந்தேன் எல்லோரும் போல அவர்களும் என்னை ஏமாற்றிவிட்டார்கள் என்னைத் தனிமையிலேயே தவிக்க விட்டுவிட்டார்களே இறைவா நான் என்ன செய்வேன்.........!!! ˙·٠•●♥ K.$ ♥●•٠·
நீ விலகியிருப்பதால் விலகி போகாது நாம் காதல் ! அது இதயத்தில் என்றும் பூத்து குலுங்கும் புது உறவு...! ˙·٠•●♥ K.$ ♥●•٠·
நான் உன்னை காதலிக்கிறேன் என்பதற்காக மட்டும் நீ என்னை காதலித்து விடாதே...! பெண்ணே என் கொடிய காதலை உன் பிஞ்சு இதயத்தால் புரிந்து கொள்ள முடியாது...! ˙·٠•●♥ K.$ ♥●•٠·