K ♥ $

-♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥- -♥-♡-- K.s --♡-♥-

running Kabilan...

superb...

Kabilan....$

என் கடைசி ஆசை நான் இறந்துவிட்டபிறகு என் ♥ இதயத்தை எடுத்து இதயமே இல்லாத என் காதலிக்கு கொடுங்க... Kabilan...$!!!

Flying K.s

K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s K.s
கண்ணீரையும் மிச்சம் வைத்தேன். நீ அடுத்த ஜென்மத்தில் என்னை ஏமாற்றினால் மீண்டும் சிந்தி விட.. Kabilan...$

Friday, May 27, 2011


உன் முகத்தை
பார்த்து
அந்த நிலவு கூட
மறைந்துவிடுகிறது...!

ஏன்னா...?

உன் முகத்தின்
பிரகாசத்தை
அதனால்
பார்க்க முடியவில்லை...
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

உயிர் அடங்கும் அந்த நாளில் நினைவுகள் அடங்கிவிடும்...
நினைவுகள் அடங்கும் அதே நாளில்
உன் நினைவுகள் அடங்கிவிடுமென்று
நினைக்கும்போதுதான் அன்பே...
நீண்ட நாள் உயிர் வாழவேண்டுமென்ற
ஆசையே வருகிறது...!!!
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

அவளை பின் தொடர்ந்த பாதை
ஓர் முள் வேலி என்பதை உணராமலே
தொடர்தேன் உணர்ந்தேன்
முள் என் காலை குத்திய போது அல்ல
என் நெஞ்சை குத்தியபோது...
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

மறக்க
வேண்டுமென்றுமீண்டும்
அதையேதான்
நினைக்கிறேன்.
மறக்க
முடியவில்லைஎன்பதை
விட
மறப்பதற்கு
மனமில்லை
என்பதுதான்
உண்மை...
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

மணம் வீசும் மலர் கூட..
இன்று கண்ணீர் வடிக்கின்றது.!
உன் கன்னத்தில் கண்ணீர்
துளிகளை கண்டதால்..
ஒரு முறை புன்னகைத்துப்பரர்
இந்த மலர் கூட இதழ் விரிக்கும்
உந்தன் புன்னகையை கண்டு..!
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

உனக்காக நான் காத்திருப்பேன், ஆனால்
நான் வாங்கிய மலர்கள் காத்திருக்க அவை
காகித மலர்கள் அல்ல.
உன்னை பார்க்காமல் வாடியது அந்த
மலர்கள் மட்டும் அல்ல நானும் தான்...
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

கண்ணீர் வடிக்கும்போதுதான்
புரிந்தது...
தனிமையில்
பிரிந்த காதலியின்
வலி என்னவென்று...
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

ஒற்றை மரத்தடியில் உட்கார்ந்து யோசித்தேன்
ஒன்று ஒன்றாய் ஞாபகம் வந்தது
ஒன்றுக்கும் உதவாத உன் ஞாபகம்...
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

யார் சொல்லுக்கும்
கட்டுபடாத என்
மனம்! -அவளின்
விழி கட்டளைக்காக
காத்திருக்கு!-இனிமேல்...
நான் சொன்னால்மட்டும்
அது
கேட்கவாபோகிறது...!
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

நீ
என் கண்ணீரை
துடித்ததை விட
என்னை
துடிக்க வைத்ததே
அதிகம் ...!!!
ஏன் ...?
உனக்காக
நான் துடித்தால ...!!!
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

பெண்ணே!
அன்று நீ சிரித்ததால்
என் சிந்தனை சிதறியது..
இன்று நீ எனை
ஏற்க சிந்திப்பதால்,
என் வாழ்க்கையே
சிரித்து கொண்டிருக்கிறது...
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

உன்னை நினைத்து நான் அழுத போது என் கண்களில் இருந்து வந்த கண்ணீர் ஆறுதல் சொன்னது என்றும் நான் மட்டும்தான் உன்னுடன் இருப்பேன் என்று...!!!!
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

உலகிலியிருந்து நான் விடை பெற்ற பின்பு,
நீ விடைக் கொடுத்த என் நினைவுகளுக்கு ,
உயிர் கொடுத்து விடாதே .....
ஏனெனில் உறங்கிய என் இதயம் எழுந்து விடும்,
நீ என்னை நினைத்தால்...!!!
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

உன்னை மறக்க முடியாமல்
நான் அழுத நேரங்கள்
என் கண்ணீர்த் துளிகள் கன்னங்களை வருடி,
கீழே வழிந்தன....
அப்போதும் நீ உன் விரல்களால்
என் கன்னத்தை வருடிய பொழுதுகளே
என் நினைவில் தோன்றின...
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

நான் இருக்கும் வரை
நீ இருப்பாய்
என்னுள் உயிராக

நதியும் கடலும்
இணைந்தது போல்
நானும் நீயும்
சங்கமித்துள்ளோம்

என்னுள்ளிருந்து உன்னையும்
உன்னுள்ளிருந்து என்னையும்
இனி பிரிப்பது யார்...
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

அவள்தன் உடைந்த
வளையல் துண்டுகளை
குப்பையில் எரிவதைப்போல்
என்னையும்,என்காதலையும்
வெறுத்து விட்டாள்...!!!
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

உன்னை
மறக்கவேண்டும் என்று
உன் நினைவை விட்டு விலகி
ஓடிக்கொண்டே இருகிறேன்
நான் ஓடும்போதெல்லாம்
என் நிழலாக
உன் நினைவுகளே
என்னை
துரத்திக்கொண்டு வருகிறது...!!!
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

உடலெங்கும் வேதனை
உன் நினைவுகள் கொடுக்கும் சோதனை
தாங்கிக்கொள்ள முடியவில்லை
உன் பிரிவை

பிளேடால் அறுக்கிறேன்
கைகளில் உன் பெயரை...
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

என் நிழல் தூங்கவில்லை
என் நிமிடம் நகரவில்லை
விழிகள் மூடவில்லை
விடியல் தோன்றவில்லை
போகும் பாதைகளில் உந்தன்
பாதக்கிறுக்கல்கள்
கேட்டும் வார்த்தைகளில் உந்தன்
நாமசத்தங்கள்
இனியாவது என் இதயம் தூங்கிடுமா?
உன் நினைவுகளை மறந்து...
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

என் எண்ணத்தை
வண்ணமாக மாற்றியவளும்
நீ தான்!
வண்ணத்தை கருப்பாக
மாற்றியவளும் நீ தான்
அப்போதும் இரவில் தான்
வாழ்கிறேன் உன் நினைவில்...!
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

பெண்ணே காதல் தோல்வி கண்டால் இதில் இருந்து மீழ்வது அடுத்த பிறவி எடுப்பதை போன்றது எனக்கு இப்பிறவியே போதும் இன்னொரு பிறவி வேண்டாம் இப்பிறவியில் உன் மீது கொண்ட காதலோடு போகிறேன் இந்த உலகை விட்டு...
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

நீ
இருக்கும் போதும்
என்னைப் போல்
யாரும் உன்னை
நேசிக்கவில்லை
நீ இறக்கும் போதும்
யாரும் உன்னுடன்
இறக்கப் போவதில்லை
ஆனாலும் அவர்களுக்கெல்லாம்
பயந்து கொண்டு
உன்னை நேசிக்கும் என்னை
எப்போதும்
ஏமாற்றிவிடுகிறாய் பெண்ணே நீ...
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

என் நிழல் என தொடர்வாய் என நினைத்தேன்
என் பகையென மாறினாய்...
இருப்பாய் பாசமாய் என நினைதேன்
அது வேசம் என சொல்லாமல் சொல்லிவிட்டு போனாய் ...
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

உன் வாசலில் ஒரு
மரமாக
காத்திருக்கிறேன்...
தினமும் ஒரு முறையாவது
என் மீது சாய்ந்து
விட்டு போ !
உன் மீது பூக்களாக
விழும்..
என் நட்பு...
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

காதலுக்கு கண் இல்லை என்று சொல்வார்கள்!
உண்மை தான் , என்காதலிகும் கண் இல்லை! கண் இருந்தால் என்னை காணமல் போவாளோ!
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

உன்னை எனக்குக் காட்டியதால்
கோடிமுறை நன்றி சொல்லியிருப்பேன் என் கண்களுக்கு
நீ பிரிந்ததும் என்னைக் காண மனமில்லாமல் அவை
கண்ணீரால் தம் முகம் மறைக்கின்றன...!
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

உனக்காக என்னை படைத்த கடவுள்.
எனக்காக உன்னையும் படைத்தது - விட்டு
இப்பொழுது உன்னை மட்டும் என்னிடம் - இருந்து
பிரித்து சென்றது ஏன்?
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

கண்களின் அனுமதி கேட்டா
நான் உன்னைப் பார்த்தேன்?

இதயத்தின் அனுமதி கேட்டா
நீ உள்ளே வந்தாய்?

நம் இருவரின் அனுமதி கேட்டா
காதல் நம்முள் வந்தது?

இப்போது யார் அனுமதி கேட்டு
என்னை நீ பிரிந்தாய்???
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

யார் சொல்லுக்கும்
கட்டுபடாத என்
மனம்!-அவளின்
விழி கட்டளைக்காக
காத்திருக்கு...! இனிமேல்...
நான் சொன்னால்மட்டும்
அது
கேட்கவாபோகிறது...!
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

Thursday, May 26, 2011


உன் கண்களால் காதலை
சொல்லிவிட்டு ஏன்..?
உதடுகள் மட்டும்
மௌனமாகி விடுகிறது...!
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

நான் உன்னை காதலித்தது பாவமா..?
இல்லை உன் நினைவால் தினம் தினம்
நான் தவிப்பது பாவமா... ?
நீதான் வேண்டும் வேண்டும் என்று
உந்தன் பின்னால் அலைவதா...?
எதடி நான் செய்த பாவம்...?
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

நான் உயிருடன் இருக்கின்றேன்
ஆனால் உன் வார்த்தைகளால்
என் உணர்வுகள் மரணித்து விட்டது
இப்போது உயிர் உள்ள நடைப்பிணம் நான்...
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

உன்னை நேசிக்கும் இதயத்தின் அன்பு
உன் தாய்க்கு உன் மீதான அன்பு போன்றது...
அந்த இதயத்தின் அன்பை நீ உணர வில்லை எனில்
உன் தாயின் அன்பையும் நீ உணராதவன் ஆவாய்...
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

அன்று
மழை பெய்யும் நேரங்களில்
என்னை நினைப்பதாய் சொன்னாய்!

இன்றும்
மழை பெய்கிறது
நான் உன்னை நினைக்கிறேன்

நீ
என்னை நினைப்பாயா...?
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

உன்னால்
மட்டும்
எப்படி முடிகிறது...?

நீ
பேசாமலே
உன்
நினைவுகளை
என்னோடு பேசவைக்க...!
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

கரையும் பனித்துளிபோல,
மறையும் மழைத்துளிபோல
தொலைத்துவிட
முடியவில்லை,

உன்னோடு
இணைந்த
என்
உறவையும்,
நினைவுகளையும்...
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

தினந்தோறும் கண்களில் கனவு சுமந்து
இதயத்தில் உன்னை வைத்து கொண்டு
வாழ்க்கை என்னும் நரகத்தில்
தினம் தினம் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்...
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

உன்னை மறக்க மறுக்கின்றது
என் இதயம் ...
உறங்க மறுக்கின்றது
என் விழிகள்...
ஆனால் இப்போதெல்லாம் என் இரவுகள்
கனவுகளில் அல்ல...
கண்ணிரில் கரைந்து போகின்றன...
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

Wednesday, May 25, 2011


உன்னை என் ஆயுள் வரை பார்க்க தேவயில்லை ஆனால் உன் குரல் கேட்காத நிமிடங்கள் என் இதயமும் செவிகளும் தற்கொலை செய்து கொள்ளும்...
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

உன்னை நினைத்து
அழும் இரவுகளில்
பொய் சொல்ல வேண்டியிருக்கிறது
அம்மாவுக்கு
வயிற்றுவலி என்றோ...
தலைவலி என்றோ...
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

பிரிந்திருந்து
கஷ்டப்படுவதைவிட
வா, காதலி
திருமணம் செய்துகொண்டு
கஷ்டப்படுவோம்
இருவரும்
இணைந்து விட்டோம் என்ற
நிம்மதியாவது இருக்கட்டும்...
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

மென் மேலும் கொல்லாதே !
தாங்காது என் இதயம்
பேசாமல் இருக்காதே - தூங்காது
என் மனது ...
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

உந்தன் தொலைபேசி
அழைப்புக்கள்...
என்னை உன்னோடு பேச
தூண்டினாலும்...
நீ இறுதியாய் சொன்ன
வார்த்தைகள்...
வேண்டாமென தடுத்து
விடுகிறது...
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

நீ உன்னை மறக்கச் சொன்னாய்
ஆனால் உயிரினில் கலந்தவள்
உன்னை மறப்பதென்றால்
நான் உயிரை விட வேண்டும்
உயிரை விடவா ?
இதற்கு பதில் கூறு
உன்னை மறக்கிறேன்...
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

கண்ணீரை நான் ரசித்தேன்
எனக்காக நீ அழும் போது...
அதே கண்ணீருக்காக என்னையே வெறுத்தேன்
என்னால் நீ அழும் போது...
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

உன்னை உயிராக நேசித்திடும் என் உடல்
உயிர் வாழும் வரை உன்னை பார்த்திடும் என் உள்ளம்
உள்ளம் உன்னை பார்த்திடும் வேளை
நிலைத்திடும் என் காதல்...
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

காதல் என்னைவிட்டு பிரியவில்லை நீமட்டும் ஏனடி
என் காதலை விட்டு பிரிந்தாய்..
என் காதலும் எங்கே என் கவிதையும் எங்கே
சொல்லிவிட்டு போ இல்லை என்னை கொன்று விட்டு போ...
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

காதல் என்ற ரோஜா
உன் கைகளை மட்டுமல்ல
இதயத்தையும் குத்திவிட்டதை
இனம் கண்டு கொண்டேன் நான்…
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

கடவுளே.......ஏய் கடவுளே......
போதும் நிறுத்து உந்தன் பெண்ணின் படைப்பு
பெண் பூவை காட்டி ஆளைத்தின்னும் சேலை நெருப்பு..
பெண்ணின் சொல்லுக்கு அட என்ன மதிப்பு
அவள் சொல்லுக்கடியில் பொய்யும் நஞ்சும் கொட்டிக்கிடக்கு
நெஞ்சம் துடிக்குதே துடிக்குதே துடிக்குதே
கண்கள் கலங்குதே கலங்குதே...
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

உன் அன்பால் தனிமையை
மறக்கிறேன்...
உன் நினைவால் தனிமையை
இழக்கிறேன்...
நீ வந்தால் தானே நான்
நானாவேன்... வா வா அன்பே...
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
Related Posts Plugin for WordPress, Blogger...